Saturday, August 28, 2010

வரலாறு

பாண்டியர், நாயக்கர் ஆட்சிகளின் வீழ்ச்சிக்குப்பின் சேதுபதிகளின் சமஸ்தான ஆட்சி நாடுகள் 72-ல் பட்டமங்கல நாடு ஒன்று. 1730 -35-ல் கிழவன் சேதுபதியாகிய பெரிய கட்டயத்தேவனின் ஆட்சியில் தமது மைத்துனராகிய புதுக்கோட்டைத் தொண்டமானுக்கு தனி ராஜ தானியும், தன் மருகர் சிவகங்கை தலைவனுக்கு தமது அரசில் 5-ல் 2 பங்கு கொடுத்து சிவகங்கை சமஸ்தானம் ஏற்படுத்திய காலத்தில் பட்டமங்கலம் சிவகங்கை சமஸ்தான மன்னர் ஆட்சிக்கு உட்பட்டது. இராமநாதபுரம் சமஸ்தான எல்லைக்கு உட்பட்ட நிலங்களில் ஏதேனும் ஒன்றில் இஷ்டப்படி ஒரு செய் கதிர் அறுத்துக் கொள்ளும் உரிமையும் பட்டமங்கல நாட்டுக்கு சேதுபதியால் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கை ராஜ ரகசிய நிருபங்கள் பட்டமங்கல நாட்டார் பார்வையிட்ட பிறகே மற்ற நாட்டாருக்கு அனுப்புவது அக்காலத்தில் வழக்கமாயிருந்தது. பட்டமங்கல நாட்டாரை "ஆணை" என்றே ரகசிய சொல்லால் குறிப்பிட்டார்கள். "ஆணை அருள் உடையவன் காண்க" என்றே ராஜ நிருபங்கள் குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டன.

பட்டமங்கல நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் பல கிராமங்கள் இருந்தன. பல்வேறு காரணங்களால் தற்போது அதன் எண்ணிக்கை 22 1/2 - ஆக குறைந்துள்ளன.இன்றைக்கும் இந்த 22 1/2 கிராமங்களை சேர்ந்தவரும் பட்டமங்கல நாட்டில் நடக்கும் திருவிழாக்களிலும், இதர முக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்வர். மேலும் திருவிழாக் காலங்களில் இந்த கிராமத்தினரின் தொண்டூழியம் மெய் சிலிர்க்க வைக்கும்.அந்த சமயங்களில் உள்ளூரில் வசிப்போரும், இவர்களை வரவேற்று, உபசரித்து , தக்க மரியாதையுடன் வழியனுப்புவர்.

1 comment:

  1. பட்டமங்கல வரலாறு மங்கலமாய் மலரட்டும்!

    ReplyDelete