Saturday, September 4, 2010

பட்டமங்கல நாட்டின் அமைப்பு




பட்டமங்கல நாட்டின் நடு நாயகமாக அருள்மிகு ஸ்ரீ மதியாத கண்ட விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலையும் ,இதன் முன்னே அமைந்துள்ள ஸ்ரீ அழகு சௌந்தரி நந்தவனத்தையும் மையமாக கொண்டே பட்டமங்கல நாடு நல்ல நகர அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.



வீரம் செறிந்த இந்த பட்டமங்கல மண்ணை மணிமுத்தாறு பாய்ந்து குளிர்விக்கின்றது. பட்டமங்கல நாட்டின் நாற்ப்புறத்திலும் கண்மாய்களும், குளங்களும் குளிர்ச்சி படுத்துகின்றன. இவற்றில் அம்மன் குளம், அட்டமாசித்தி பொற்றாமரை குளம், தெப்பக் குளம், செட்டியார் குளம், தலைக்காணி ஊரணி, அரசு ஊரணி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வீதிகள் காற்றோட்டம் உள்ளனவாக சுகாதார முறையில் நாட்டின் அமைப்பு விளங்குகிறது.


எல்லாவற்றிக்கும் மேலாக, பட்டமங்கல நாட்டை நான்கு திசைகளிலிருந்தும் காவல் தெய்வங்கள் முறையே



தெற்கே ஸ்ரீ அழகு சௌந்தரி அம்பாளும், ஸ்ரீ ஆலத்தி அய்யனாரும்,



வடக்கே ஸ்ரீ கரியமலை சாத்த அய்யனாரும், ஸ்ரீ ராவுத்தராயரும், ஸ்ரீ நயினாரும் ,


மேற்கே வேளனிப்பட்டி ஸ்ரீ சித்தம் காத்த அய்யனாரும், ஸ்ரீ மாணிக்க நாச்சி அம்பாளும்,


கிழக்கே ஸ்ரீ வல்ல நாட்டு கருப்பரும்


கோவில் கொண்டு கண்ணின் இமை போல காத்து வருகிறார்கள்.
கோவில் சூழ் இந்த பட்டமங்கல நாட்டில் பிறப்பதற்கு எவ்வளவு மாந்தவம் செய்திருக்க வேண்டும் !!

No comments:

Post a Comment