அருள்மிகு மதியாத கண்ட விநாயகர் உற்சவர் |
பட்டமங்கல நாட்டின் நடுநாயகமாக உள்ளது இத்திருக்கோவில். மூலவர் மதியாத கண்ட விநாயகர். மதி (சந்திரன்), ஆதவன் (சூரியன்) கண்டு வழிபடப்பட்ட விநாயகர். இத்திருக்கோவிலுள்ள விநாயகர் மதுரை பாண்டியன் கோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்டு கீழக்கோட்டை என்னும் கிராமத்தில் வைத்திருந்து பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டவர். மூர்த்தி மிக சிறியவர், கீர்த்தி மிக்கவர்.
கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் கம்பீரமாகவும், மதில் சுவரின் பிரகாரமும், ஈசான்ய மூலையில் கரூவூலறையும் அமைந்துள்ளது. முன்மண்டபக்கொட்டகை வெளிப்புறம் கிழக்கு நோக்கி வடக்கு தெற்குகளில் இரு திண்னணைகளும் கூடியது.
சேதுராயர் |
மேலும் ஈசான்ய மூலையில் கல்விக்கு தெய்வமாக எழுத்தாணியுடன் சேதுராயர் வீற்றிருக்கிறார். இந்த சேதுராயரின் வம்சாவளியினர் இன்றும் பட்டமங்கலத்தில் வசித்து வருகின்றனர்.இன்றைக்கு நாட்டுக் கணக்கு பிள்ளை என்றழைக்கப்படும் சேதுராயர் வம்சாவளியினர் சிவகங்கை சமஸ்தானத்தால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களின் முன்னோர் ராமநாதபுரம் அரண்மனையில் அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர்.
கோவிலின் தென்புறம் திருக்குளம், தென்னந்தோப்பும், முன்புறம் ஸ்ரீ அழகு சௌந்தரி நந்தவனமும் உள்ளன.
கோவிலின் தென்புறம் திருக்குளம், தென்னந்தோப்பும், முன்புறம் ஸ்ரீ அழகு சௌந்தரி நந்தவனமும் உள்ளன.
"மதியாத கண்ட விநாயகா உன்னைத்
துதித்து உன்பாதம் சரணடைந்த பக்தருக்கு
விதியாலே எதுவறினும் மதியாலே வெல்ல வெற்றிக்
கதிபதியே அருள் தருவாய்"
விதியாலே எதுவறினும் மதியாலே வெல்ல வெற்றிக்
கதிபதியே அருள் தருவாய்"
Excellent blog.....Post more pictures and info on this.
ReplyDelete